குஷ்பு வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில் ‘சேரி பாஷை’ ஒருவரை விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்காக அவருக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அவர் அதற்கு விளக்கம் கொடுத்து, மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிவிட்டார்.

இந்தநிலையில் அவரது பேச்சைக் கண்டித்து இன்று பகல் 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவின் வீட்டின்முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்காக முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.