தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரி பார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் நேற்றுடன் இந்த பணிகள் முடிக்கப்பட்டு  தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களின் நிலை குறித்து மகளிர் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டது. 1.65 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.