வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தைக் கூட அவர்கள் நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். ஏன்! தற்போது மகளிர் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் திட்டம் கூட நிறுத்தப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.