தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ‌ . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் ‌. இதனால் ‘கயல்’ ஆனந்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் ‌. இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டி வீரன் ,பரியேறும் பெருமாள் ,விசாரணை ,என் ஆலோட செருப்பைக் காணோம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை ஆனந்தி, தனது மகனுக்கு சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளார். ‘இராவண கோட்டம்’ படத்தில் நடித்துள்ள அவர், அதற்கான புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது இது குறித்து பேசிய அவர், தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கியுள்ளேன். தன்னுடைய இந்த மாற்றத்திற்கு, தான் படித்த புத்தகங்களும், சில நண்பர்களின் உரையாடலும்தான் காரணம் என்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.