இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் இணைந்துள்ளனர். மக்களின் தேவையை கருதி அஞ்சலகம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆதார் மற்றும் மொபைல் எண்ணை சேமிப்பு கணக்குடன் இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அதேசமயம் தங்கள் கணக்கு தொடர்பான விவரங்களை அறியவும் எஸ்எம்எஸ் மூலமாக செய்திகளை பெறவும் கட்டாயம் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.