நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரியதர்ஷினி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.நகரில் இருக்கும் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து பிரியதர்ஷினி ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பிரியதர்ஷினி கடைக்கு சென்றார்.

அதே சமயம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பிரியதர்ஷினியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி கத்தி கூச்சலிட்டபோது யாரும் உதவிக்கு வரவில்லை. உடனே ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு மர்ம நபர்களை துரத்தி சென்றார். விடாமல் 3 கிலோமீட்டர் தூரம் வரை பிரியதர்ஷினி துரத்தி சென்றும் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

அதன் பிறகு பிரியதர்ஷினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பிரியதர்ஷினி திருடர்களை துரத்தி சென்றது பதிவாகி இருந்தது. கூடிய விரைவில் தங்க சங்கிலியை மீட்டுத் தருவோம் என போலீசார் உறுதி அளித்தனர். மேலும் இளம் பெண்ணின் துணிச்சலை பாராட்டியுள்ளனர்.