கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் தீபா தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் அன்று கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த செல்வம் தனது மனைவியை கீழே தள்ளியுள்ளார்.

இதனால் தலையின் பின் பகுதியில் படுகாயம் ஏற்பட்டு தீபா மயக்க நிலைக்கு சென்று விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து செல்வம் அச்சத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக குழந்தை வீட்டிற்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது செல்வம் தூக்கில் தொங்கிய நிலையிலும், தீபா ஊருக்கு போராடிக் கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த செல்வத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.