பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு தள்ளியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 1ரேஞ்சர்,2 போலீசார், 1 சுகாதார பணியாளர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தும் 14 பேர் காயம் அடைந்தும் உள்ளனர்.

இது குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் அலுவலக கட்டிடத்தின் வழியாக இறங்கி பயங்கரவாதிகளுடன் பல மணி நேரம் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இந்த பதில் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கூறியதாவது “பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்க வேண்டும். மேலும் பயங்கரவாதிகள் நீதியின் முன் கொண்டு வந்து கொல்லப்படுவார்கள். பயங்கரவாதத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.