அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வானில் பறந்த மர்ம பொருட்களில் உளவு பலூனைத் தவிர மற்ற பொருட்கள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் அதன் எல்லை பகுதிகளில் தொடர்ச்சியாக வானில் பறந்த மர்ம பலன்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருட்களில் ஒன்று மட்டும் தான் சீனாவின் உளவு பலூன் என்றும் மீதமுள்ள மூன்று மர்ம பொருட்கள் தனியார் நிறுவனத்தினுடையது என தெரிவித்துள்ளார். மேலும் அந்த மர்ம பொருட்கள் என்னென்ன நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் எந்த காரணத்திற்காக அது பறக்க விடப்பட்டது என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.