நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலமாக தனது பெயரை அசோகன் என்று மாற்றி பாஸ்போர்ட் தயார் செய்து வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மலிண்டோ விமானம் மூலமாக திருச்சிக்கு வந்தபோது இமிகிரேஷன் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனைக்கு உள்ளாக்கினார். அப்போது அது போலியான பாஸ்போர்ட் என்பது உறுதியான நிலையில் பக்கிரி சாமியை விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.