இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரினால் ஏற்படும் மனிதாபிமான பேரழிவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய போது இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீனியர்கள் என இருவரையும் பற்றி நான் சிந்திக்கிறேன்.

போர் எந்த பிரச்சனையையும் தீர்வுக்கு கொண்டு வராது. காசாவின் நிலைமை மிகவும் மோசமானது.  போர் மரணத்தையும் அழிவையும் வெறுப்பையும் தான் அதிகரிக்கிறது. ஆயுதங்களை அமைதிப்படுத்தி ஏழைகள் குழந்தைகளின் அமைதிக்கான முழக்கத்தை கேட்டுப்பாருங்கள் என கூறியுள்ளார்.