ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் யூத வழிபாட்டு தலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற வழிபாட்டு தலத்தின் சார்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் தங்கும் விடுதிகள் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழிபாட்டுதலத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கு வெடிக்கும் தன்மை கொண்ட வேதிப்பொருட்களை வீசி சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் வழிபாட்டு தலத்தை கட்டுக்குள் கொண்டு வந்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.