இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் 13 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போர் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் ஆதரவாக உள்ளது.

காசாவில் உள்ள பல பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் விமானம் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் காசாவில் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் 5500 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேர் பலியாகி உள்ளனர்.