இஸ்ரேலில் இருந்து இதுவரை 1200 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை ஐந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த இந்தியர் ஒருவருக்கு இஸ்ரேலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவு துறை தகவல்.

காசாவில் இதுவரை 3200 மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1500க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை வேதனை தெரிவித்துள்ளது.

இதனிடையே சவுதி இளவரசருடன் பிரிட்டன் பிரதமர்  ரிஷி சுனக் இன்று சந்திப்பு நடத்தினார். காசா மருத்துவமனை தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.  இஸ்ரேலில் இருந்து சவுதி செல்கிறார் பிரதமர். சவுதி இளவரசருடன் பிரிட்டன் பிரதமர் இன்று சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.