தமிழகத்தில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா பொருட்களை விற்பதற்கான தடை தற்போது அமலில் உள்ளது. ஆனால் இந்த தடையை மீறி பலரும் சட்ட விரோதமாக போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் சட்ட விரோதமாக போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்காணிக்க தடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.