பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது பிறந்த நாளை கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி கொண்டாடியதை முன்னிட்டு, ராஜஸ்தானில் பா.ஜ.க. சார்பில் பல்வேறு சேவை நடவடிக்கைகள் நடைபெற்றன.
இதற்கான ஒரு பகுதியாக, ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (RUHS) மருத்துவமனையில் ‘சேவா பக்கவாடா’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண் பா.ஜ.க. தொண்டர், ஒருவருக்கு பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுக்கும் போதே புகைப்படம் எடுக்கச் சொல்லி, அதை உடனே திரும்பப் பெற்றது போன்ற காட்சிகள் வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
This is the true face of the BJP.
During the ‘Seva Pakhwada’ in Jaipur, BJP workers visited a cancer hospital and posed for photos while handing ₹10 biscuit packets to patients — but once the photos were taken, they took the packets back.#viralvideo pic.twitter.com/OtrcE20tVO— Dr Prisha Sargam (@PrishaSargam) October 3, 2025
வீடியோவில், உதவி செய்யும் பரிதாபத்தை உருவாக்கும் நோக்கத்தில் அந்த பெண் செயலில் ஈடுபட்டதாக தெளிவாக தெரிகிறது. இதனை பல சமூக ஊடக பயனாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“பொதுமக்களுக்கு உதவுவது பாசத்துடன், மனதார வேண்டும்; பிம்பம் மற்றும் விளம்பரத்திற்காக அல்ல” என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் அதிகரித்துள்ளன.
தற்போது இந்த வீடியோவின் அடிப்படையில், அந்த பெண் தொண்டரின் செயல் மீதான நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. மேலும் இது தொடர்பாக பாஜக தரப்பில் இதுவரை எந்தவிதமான விளக்கம் வெளியிடப்படவில்லை.
