பொறியியல் கல்லூரிகளில் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உறுப்பு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் சார்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தற்போது முதல் பருவத்தில் தமிழ் மரபும் இரண்டாம் பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை தகுதி வாய்ந்த தமிழ் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதனால் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.