உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரால் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடைகளினால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும் விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கடந்தாண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் விலைவாசி 8.5% உயர்ந்துள்ளது. இதனால் அந்நாடுகளில் ஜனவரி மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனை எதிர்கொள்ள ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.5% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விழிம்பு நிலை கடன் 3.5%, வைப்புத் தொகை 2.5% மற்றும் முக்கிய மறு கடன் செயல்பாடுகள் 3 சதவிதமும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது.