உலகின் மர்மமான தேசம் என அழைக்கப்படும் வடகொரியாவில் நாட்டு மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்நாட்டு மக்கள் பிற நாடுகளில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் குடும்பப் பெயர்களை அந்நாட்டு மக்கள் யாரும் பயன்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என வினோத தடை விதித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக தனது மகளை அவர் பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். தற்போது தன் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து செய்வதறியாத திகைத்து வருகின்றனர் வட கொரியா மக்கள்.