மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதல் பாகம் அதிக வரவேற்பை பெற்றதால், 2-ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் இசை வெளியீடு விழா ஏப்ரல் 5ம் தேதியன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.