பத்து மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வருடத்திற்கு இரண்டு முறை எழுதுவது கட்டாயம் அல்ல என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்களை சந்தித்தேன். அவர்கள் அதை வரவேற்றார்கள். மேலும் இது  நல்ல யோசனை என்றும்  கூறினார்கள்.  2024 ஆம்  வருடத்தில் இருந்தே  வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வு நடத்தும் திட்டத்தை அறிமுக ப்படுத்த இருக்கிறோம்.

மாணவர்கள் பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் தங்களுக்கு ஒரு வருடம் வீணாகி விட்டதாக கருதுகிறார்கள். இதனால் ஒரு முறை மட்டும் தேர்வு நடத்துவதால் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கவே இரண்டு முறை தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.