நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய  மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து ரேஷன் திட்டம் தொடங்கப்பட்ட து.அதன் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. உணவு தானியங்கள் மட்டுமல்லாமல்  மாளிகை சாமான்கள், பரிசுத்தொகுப்பு, நிதி உதவி போன்ற உதவிகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரேஷன் தொகுப்பில் 4 பொருளுக்கு பதிலாக ஆறு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் நூறு ரூபாய்க்கு இந்த உதவியை பயனாளிகள் பெறலாம். இந்த பரிசுத்தொகுப்பில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரை கிலோ ரவா சனா பருப்பு, மாவு மற்றும் அவல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.