பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குழப்பமான அறிவிப்பை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல TNSTC பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேட்டிற்கு வர வேண்டும் என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்து விரைவுப் பேருந்துகள் (SETC) மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த குழப்பமான அறிவிப்பால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.