தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது. தற்போது போகி பண்டிகை,மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை தினங்கள் வருகின்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 17 வரை 4 நாட்கள் அரசு விடுமுறையாகும். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக ஜனவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி புதன்கிழமையும் சிறப்பு கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக அரசு ஆலோசித்து விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.