தமிழக ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும்  வழங்கப்பட்டு வருகிறது.  அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் உதவித் தொகை திட்டத்தின் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அவை அனைத்தும் பொங்கலுக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல போலி ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்க சாத்தியக்கூறு இருந்ததால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தன. இன்னும் 2 மாதத்தில் அவை வழங்கப்படும் என்று தெரிகிறது.