தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பிறகு அதிக அளவில் விடுமுறையானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயுத பூஜை முதல் தசரா பண்டிகை ஒட்டி நான்கு நாட்கள் வரையிலும் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணத்தினால் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள்  திணறுகிறார்கள்.  இதனால் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தீபாவளி விடுமுறை முடிவடைந்த பிறகு அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை விடப்படும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தீபாவளி விடுமுறை குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.