ஒடிசா மாநிலத்தில் சரஸ்பாசி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுபத்ரா (70). கணவரை இழந்த இவருக்கு கருணா, சத்ருக்னா மகந்தா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கருணா உடல் சுபத்ரா வசித்து வந்த நிலையில் மூத்த மகன் கருணை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்த பிறகு போக்கிடம் இல்லாமல் இருந்த சுபத்ரா பண தேவைக்காக இளைய மகன் தோட்டத்தில் காலிஃப்ளவர் பறித்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனை அறிந்த மகன் பெற்ற தாய் என்றும் கூட பாராமல் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். இந்த கொடூர செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்து அவரை பத்திரமாக மீட்ட போலீசார் சுபத்ராவின் இளைய மகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.