அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.