உலகின் மிக வன்முறையான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அந்த நாட்டில் விதிக்கப்படும் கடுமையான விதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தென் கொரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால், அப்படி சென்றவர்கள் வடகொரியாவில் தங்கியிருக்கும் அவர்களது குடும்பங்களுக்குப் பணம் அனுப்பக் கூட முடியாது.

இது தடைசெய்யப்பட்டுள்ளது. இப்படி வடகொரியாவில் நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் கடுமையாகி வருவதால், வாங்கி சாப்பிடுவதற்கு பணம் கூட இல்லாமல் முதியவர்களும், குழந்தைகளும் புல் சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களின் கால்கள் மற்றும் கைகள் வீக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.