சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் 39வது லீக் ஆட்டம் நடைபெற்ற நிலையில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் ருதுராஜ் 108 ரன்கள் எடுத்து சதம் அடித்தார்.

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் லக்னோ அணியில் ஸ்டோய்னிஸ் 124 ரன்கள் எடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேப்டன் ருதுராஜ் சதம் அடித்ததால் சென்னை அணிக்காக முதல் முறையாக சதம் அடித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் இவர் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டியில் 8-வது சதம் அடித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.