புதிதாக பெயர் வைப்பதால் மட்டும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள twitter பதிவில், தமிழகத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்ய திட்டம் பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விதியை ஒழுங்காக பயன்படுத்தினாலே போதுமானது. புதியதாக பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.