அசைவ உணவு சாப்பிடுவது அவரவர் விருப்பம் அதை அரசு தடுத்த நிறுத்த முடியாது என்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலூ தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி கவலை தெரிவித்து அகற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், உணவு சாப்பிட ஓரின் தனிப்பட்ட கருத்தில் தானோ அரசோ தலையிட முடியாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் உள்ளது. இந்த உணவை தான் சாப்பிட வேண்டும் இந்த உணவை தான் விற்க வேண்டும் என்று யாரும் கூற முடியாது. பௌர்ணமி நாட்களில் கிரிவலப் பாதையில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகள் சமைக்கப்படுவதில்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.