சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த நாராயணி என்ற பெண், தன்னுடைய 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தரகர் மூலம் விற்றிருக்கிறார். இதனை அறிந்து கொண்ட பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மிண்ட் ரமேஷ், நாராயணியை மிரட்டி 45 லட்ச ரூபாயை பறித்து சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் புகாரை அடுத்து மிண்ட் ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தகவல் கொடுத்த தரகர் மகேஷும் கைது செய்யப்பட்டார்.