பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டால் அது குற்றமாக கருதப்படாது என ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் உடலுறுவு வைத்து கொண்டு அதன் பிறகு திருமணம் செய்ய காதலன் மறுப்பதாகவழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கி இளம்பெண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. அதாவது திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதை கேட்டு ஒருமித்த சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பிறகு, வேறு சில காரணங்களால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனால், அதை பலாத்காரமாக கருத முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.