அறிவியல் வளர்ச்சிகளும் தொழில்நுட்ப நாகரிகமும் அதிகரித்து வரும் இந்த காலத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது மோசமான நிலையை அடைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கான பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மை சேஃப்டி பின் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது சென்னை மாநகராட்சி உடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த செயலி மூலமாக ஒரு குறிப்பிட்ட பகுதி குறித்த பாதுகாப்பு மற்றும் தெருவிளக்கு போன்ற பாதுகாப்பற்ற காரணங்களையும் மக்கள் அறிந்து கொள்ளலாம். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பாக பெண்களின் பாதுகாப்புக்கு உதவி எண்கள் உள்ளதாகவும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலியின் மூலம் பாதுகாப்பான பகுதி குறித்த தகவல்களை பெண்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.