ஹரித்துவாரில் நடந்துள்ள இந்தச் சம்பவம், மனிதநேயமே செத்துவிட்டதோ என்று கேட்க வைக்கும் அளவுக்குக் கொடூரமாக உள்ளது. மாடியில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்த சிறுமி பேத்தியைத் தாத்தா ஒருவர் எவ்வித தயக்கமும் இன்றி படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இந்தக் கொடூரச் செயலைப் பார்த்துப் பதறிய பாட்டி, ஓடிச் சென்று அந்தச் சிறுமியைக் காப்பாற்றியுள்ளார். ஆனால், அந்தத் தாத்தாவோ பேத்தியைத் தள்ளிவிட்டுவிட்டு, ஏதோ பெரிய சாதனை செய்தது போலத் தனது கட்டிலில் நிம்மதியாகப் போய் படுத்துத் தூங்கியது, வீடியோவைப் பார்க்கும் அனைவரையும் உறைந்து போகச் செய்துள்ளது.
🚨 Heart-hearted Grandfather: Heartbreaking footage emerges from Haridwar – But grand mother 🙏
A shocking video shows a grandfather callously pushing his little granddaughter down the stairs while she was walking down from the roof.
Unable to witness this cruelty, the… pic.twitter.com/avXkkvU19A
— Ramesh Tiwari (@rameshofficial0) June 9, 2026
மகன் மற்றும் மருமகளுடன் குடும்பத் தகராறு இருக்கலாம், ஆனால் அந்தத் தனிப்பட்ட பகைக்குக் காரணமே தெரியாத பச்சைக் குழந்தைகளை ஏன் பலிகடா ஆக்க வேண்டும்? தாத்தா, பாட்டிகளிடம் அன்பையும், அரவணைப்பையும் தேடி வரும் குழந்தைகளுக்கு, இத்தகைய வன்மத்தைச் சம்பாத்தியமாகக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? குடும்பப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு குழந்தைகளை இப்படி மிருகத்தனமாக நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அதிர்ச்சிகரமான வீடியோ இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
