பெண்களுக்கு உதவும் விதமாக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணிக்கு மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி அமைச்சகம் சார்பாக ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் பெண்கள் உதவி மையம் செயல்பட்டு வருகின்றது.

இதில் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் மே 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், எட்டாவது தளம், சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை 1 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.