கர்நாடகா தேர்தலில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் வாக்குறுதையை நிறைவேற்றும் விதமாக நேற்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி கே சிவகுமார் ஆகியோர் சக்தி திட்டம் என்ற இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்றும், பெண்களின் வளர்ச்சிக்காக முக்கிய நடவடிக்கையாக இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமல்லாமல் திருநங்கைகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.