இந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் நடிகர் ராஸ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படம் குறித்து நடிகை ராஷ்மிகா ஒரு சுவாரசிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது புஷ்பா முதல் பாகத்தில் நடிக்கும்போது ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஆனால் தற்போது என்னுடைய கதாபாத்திரம் பற்றியும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்பது பற்றியும் நன்கு தெரிந்து விட்டது என்றும் கூறியுள்ளார். தற்போது தான் ஸ்ரீவள்ளி 2.0 கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் புஷ்பா 2 படம் குறித்து ராஷ்மிகா மந்தனா கூறிய தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.