மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் தமிழில் அசல், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பாவனா தற்போது தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஒருவரின் அடிப்படை உரிமை என்பது தனி உரிமை தான். அது எனக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உரிமை. ஆனால் அப்படிப்பட்ட தனி உரிமையே தற்போது எனக்கு பாதுகாப்பாக இல்லை.
என்னுடைய வழக்கு தொடர்பான மெமரி கார்டின் ஹாஷ் பலமுறை மாற்றப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. நீதிமன்றத்தில் என்னுடைய உரிமை பாதுகாப்பாக இல்லை என்பதை நினைக்கும் போது மிகவும் அச்சமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. நீதிமன்றத்திலேயே இப்படி நடப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் எனக்கு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறையவில்லை. மேலும் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடுவேன் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram