மேற்குவங்க மாநிலம் நாடியா என்ற மாவட்டத்தை சேர்ந்த சுபாஜித் பிஸ்வாஸ் என்ற 16 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். சில வருடங்களுக்கு முன்பு சிறுவனின் வலது கையில் சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டது. அதனை புற்றுநோய் என்று மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில் சிகிச்சைக்காக எவ்வளவு செலவழித்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இறுதியில் அந்த சிறுவனின் கை அகற்றப்பட்டது. இருந்தாலும் சிறுவன் மனம் தளராமல் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார். இரண்டு மாதங்களில் இடது கையால் எழுத சிறுவன் கற்றுக் கொண்டான்.