சென்னை தீவுத்திடலில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் புயல் எதிரொலியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10 ஆகிய தேதிகளில் இந்த பந்தயம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளால் தற்போது சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த பந்தயம் நடத்தப்படும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.