சென்னையில் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேங்கிய மழை நீர் வெளியேற்றப்படுகிறது. தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இன்று அனைத்து புறநகர் ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.