தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை  விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 47வது புத்தக கண்காட்சி சென்னை, நந்தனத்தில் நாளை (ஜன.03) தொடங்குகிறது.

வரும் 21ஆம் தேதி வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெறும். இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சுமார் 1000 அரங்குகளில் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் பொதுமக்கள் மற்றும் புத்தக பிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. வேலைநாட்களில் பிற்பகல் 2 மணி முதல் 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெற உள்ளது.