புதுமண தம்பதிகள் திருமலைக்கு வந்து ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்றாள் சகல சுகங்களும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதனால் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் புதுமண தம்பதிகளுக்காக நாள் ஒன்றுக்கு 20 டிக்கெட் களை தேவஸ்தான நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. புது டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாயாகும். இதனை திருமண விழாக்கள் மற்றும் பிரத்தியேக தரிசனத்திற்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.