புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜூன் 2) 14 மணி நேரம் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் இன்று  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மரப்பாலம் மற்றும் வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சாரத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.