புதுச்சேரியில் இருந்து பெங்களூருவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையே  2 ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இந்த விமானம் அங்கிருந்து பெங்களூருக்கு செல்கிறது. அதன்பின் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்கிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரூவிற்கு செல்லும் விமான சேவை மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும் ஹைதராபாத்திற்கான விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வந்திருந்தது. இந்நிலையில் பெங்களூருகான ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் பராமரிப்பு பணி முடிவடைந்த நிலையில் நேற்று மீண்டும் புதுச்சேரி – பெங்களூருக்கு விமான சேவை தொடங்கியுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து விமானம் மதியம் 1:55 மணிக்கு புறப்பட்டு 2.50 மணிக்கு பெங்களூர் சென்றடைந்தது. அதன்பின் மீண்டும் 3:20 மணி அளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி விமான நிலையத்தின் 4:15 மணிக்கு வந்தடைகிறது.