தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர் சங்கங்களுக்கான சந்தா வசூலிப்பது மற்றும் ஆலோசனை செய்வது ஆகியவற்றை தடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களாக முதன்மை கல்வி அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி புகாருக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.