பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை பெற பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 21 அதாவது நாளை முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் சுமார் 1467 காலியிடங்கள் உள்ளது. இவை ஆண்டு தோறும் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான இணைய விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி வரை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தகுதியான மாணவர்களுக்கான செயற்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கியது. தற்போது பொது பிரிவினருக்கான கடந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.