செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கலைஞர் திருவுருவச் சிலை மற்றும் பேனா வடிவிலான சிலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, பாஜக என்ற கட்சியே தமிழ்நாட்டிற்கு தேவையற்றது.

எல்லா கட்சிகளிலும் பல அணிகள் உள்ளது. அதனைப் போலவே அமலாக்கத்துறை மற்றும் ஐடி போன்ற பல அணிகள் பாஜகவில் உள்ளன. நாங்கள் இடிபார்த்தும் பயப்பட மாட்டோம் மோடியை பார்த்தோம் பயப்பட மாட்டோம். நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார்.